சொல்லும் காதலை விட... சொல்லாத காதல் ரணமாம்... யார் சொன்னது... சொல்லாத காதலையெல்லாம் காகிதத்தில் சேகரித்தேன்.. கவிதையாக மாறியது... சொல்லி இருந்தால் காவியமாக மாறியிருக்குமோ? ஏக்கம் கொண்ட காதலும் தாக்கம் கூட்டுகிறது இதயத்தை... தென்றலிடம் பல முறை சொல்லி வைத்தேன்.. அவனை தீண்டிய காற்று மட்டுமே என்னுள் சுவாசமாக கலந்திட.. வானத்திடமும் பல முறை சொல்லி வைத்தேன்.. அவன் நடக்கும் திசை எல்லாம் மேகத்தால் சூழ்ந்து இளைப்பாற்றிட... பூமியெங்கும் சொல்லி வைத்தேன் அவன் பாதம் நோகாமல் பாதுகாத்திட... ஆனால் அவனிடம் மட்டும் சொல்ல மறந்தேன் இந்த வாழ்க்கை அவனுக்காக மட்டுமே என....
27.5 அவனின் அருகாமை எதிர்பார்த்தவள் இப்போதெல்லாம் அவனது விலகலை உணர ஆரம்பிக்கிறாள்... ஆம் இடைவெளி நேர்கிறது இருவருக்குள்ளும்... அது மொத்தமாய் முறிந்து போகுமோ என அச்சம் நீடித்தாலும்... பல நேரங்களில் அவனை விட பெரிதென்னவோ என அவன் மகிழ் வை விட நம் வலி பெரியதோ என புன்னகையோடு விலகுகிறாள் மனதில் ஆயிரம் பாரத்துடன்
என் தனிமையின் துணைவனோ... புன்னகை அரசனோ... கவலைகள் மறக்க செய்யும் மந்திரக்காரனோ.. இவன் என் மாயவன்... அவனின் முறுக்கிய மீசைக்குள் பலமுறை பதுக்கி வைத்து கொள்கிறான் என் மீது கொண்ட காதலையும்... அவன் ஓர விழி பார்வையும் உதட்டோர புன்னகையும் பலமுறை கொன்று போகிறது இதயத்தை.. காந்த பார்வை வீசி ஈர்த்து போகிறான் என்னையும் மொத்தமாய்... விரல்களின் இடைவெளியையும் நிரப்பிடுகிறான்.. என் விரல்கள் பிடித்து.. நெஞ்சோடு முகம் சாய்க்க.. மூச்சு காற்றில் மோட்சம் தருகிறான்... சொர்க்கம் சென்றடைந்ததாய்.. அணைப்பில் அவன் உடலோடு என் உடல் சேர்க்க.. கை கொண்டு அழுத்திட பல நரம்புகளின் மாற்றங்கள் உணர்கிறேன்... அவன் இதழ் செய்யும் லீலையில் என் மொத்தமும் இழக்கிறேன்.. என்னை இழந்தவளாய் அவனோடு லயிக்கிறேன்.. இப்படியும் ரசிக்க முடியும் என உணர செய்த ஆணவன்.. இப்படியும் வாழ முடியும் என கற்று தந்த மாயவன்.. அவனே என்றும் என்னவன்...
Comments
Post a Comment